Thursday, 10 September 2015

இப்படிக்கு வறுமைக்குரியவன்...

தாயின் அரவனைப்பை பெரும் வயதில்
பசியின் அரவனைப்பையே பெற்றோம்!!
பாலின் ருசி அறியும் பருவத்தில்
பசிக்கு நீரையே ஆகாரமாக்கினோம்!!
பள்ளிச் சென்று கல்விப் பயிலும் வயதில்
கூலி வேலைக்கு சென்று வாழ்வின்
போராட்டங்களையே பயின்றோம்!!
அடுத்த வேளைப் பசியை போக்க
நாவின் ருசியைப் போக்கினோம்!!
பழகும் இடமெல்லாம் பஞ்சமே தென்பட்டது!
குப்பைக்கூடமே கூடாரமானது!!
இறைவா!!நான் வேண்டுகிறேன், இந்த
இரக்கமற்றவர்களின் இருதயம் மாறுவதர்கல்ல
அடுத்தப் பிறவியிலாவது செல்வந்தனாய்
பிறப்பதற்கு..
நான் பிழைக்க அல்ல என் இனம் பிழைக்க!!

No comments:

Post a Comment