Sunday, 18 October 2015

இயல்பு மறந்தது

புவியில் உயிரினமாய்
மனிதன் தோன்றி,
பல தோல்விகளை
தொட்டுப் பார்த்து,
அதன் துயரங்களை
சகித்துப் பார்த்து,
பின் வெற்றிகள்ப்பல
ருசித்துப் பார்த்து,
அதன் களிப்பில் மடி
சாய்ந்து படுத்து கிடந்து
பின் செத்து மடிவது ஏன்தானோ?
என இயல்பினது சிந்தையின்
குறல் சிகரம் தான்டி ஒலிக்க,
அசிறீறியாய் மறுமொழி ஒலித்தது!!
எவையெலாம் யாதென
நீ பொருட் கேட்க
அவையெலாம்
நீயென மற்ந்தாயோ!!

Sunday, 4 October 2015

கனவுகளின் பாதை

அக்னியெனும் துன்பக்கடலில்
வளர்ந்த பிரம்மாண்ட
அக்னியின் பிரம்மனே!!

நீ படைத்த அக்னி
மட்டுமல்ல,
நீ எழுதிய அக்னி சிறகுகளும்
இளைஞனின் மன அக்னிக்கு
எரிப்பொருள் ஆனது!!

அந்நியர்கள் அலற
அக்னி படைத்தாய்!
மழலைகள் மலர
எடை குறைந்த
செயற்கை கால்கள்
அளித்தாய்!!

உன் விஞ்ஞானம்
அழியக் கூடியதல்ல
அழிவதையும்
அழிவற்றதாக்குவது!!

நீ அனைத்து
விஞ்ஞானிகளையும்
தன்னுள் அடக்கிய
மெஞ்ஞானி!!

எங்களை கனவுக்காண
செய்ய நீ கண்ட கனவுகள்
பாதியில் களைந்ததேனோ??

நீங்கள் மண்ணில்
விழவில்லை
எங்கள் மனதில்
விழுந்திருக்கிறிர்கள்
விதையாக!!
அவ்விதையின் வீரியம்
கண்டு வியக்கும்
இந்த உலகம் ஒரு நாள்!!

ஏவுகனை மனிதனே!
நீ காட்டிய பாதையில்
சென்று ஏற்றம்
காணுவோம்!!
உம் களைந்த
கனவினை நாங்கள்
கண்டு நினைவாக்குவோம்!!
நிம்மதியாக
உறங்குங்கள்!!

Friday, 2 October 2015

மொழிகளுள் இவன் அமரன்!!

பழகிய கிளியும் 
பைந்தமிழ் கொஞ்சும்! 
உயர்மலையும்த் தமிழ் 
கேட்டு உருகும்!! 

அமுதின் சுவையை 
காணாதவர் நீரோ??
தமிழில் பேசிடு
சுவைத்திட அமுதை!!

வள்ளுவன் பெற்றான்
தமிழால் பெருமையை
இவனால் பெற்றோம்
தமிழினப்பெருமையை!!

வணங்கா முடியாரும்,
முடியுடை வேந்தரும்
முத்தமிழ் முன்
மகுடத்தை மதிப்பரோ??

கம்பனின் கவிதையில்
கரைந்தவனும் உண்டு!!
பாரதியின் பாட்டால்
பாரம் உயர்த்தியவனும் உண்டு!!
இலக்கணச்சுவையில்
இம்மொழியை மிஞ்சப் 
பிற மொழி உண்டோ??

இவ்வழகிய மொழியினை
மொழிந்திட ஒரு
மொழித் தகுமோ?

அனைத்து மொழிகளும்
அலையென வாரீர்!!
இனியத் தமிழினை
இசைந்து பாடிட
வாரீர்!!!